`10% இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படமாட்டாது'- அமைச்சர் பொன்முடி அதிரடி!

`10% இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படமாட்டாது'- அமைச்சர் பொன்முடி அதிரடி!

”சமூக நீதி கொள்கையில் பாஜக அரசுக்கு நம்பிக்கையில்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள பத்து சதவீத இட ஒதுக்கீட்டைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்“ என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத்  தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இது தொடர்பாகச் சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, “தமிழக அரசின் தீர்மானத்திற்குக் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும் ஆதரவு அளிக்கும் என நம்புகிறோம். அவசர அவசரமாக பத்து சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. பாஜகவிற்கு சமூக நீதி கொள்கையின் கீழ் நம்பிக்கை இல்லை. மத்திய அரசு பாஜகவிற்கு ஆதரவாக அதிமுக செயல்படுவதைத் தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். பத்து சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. பத்து சதவீத இட ஒதுக்கீட்டைத் தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in