
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அரசு பேருந்தில் தென்காசிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.
பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும் போது, மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்தியதாக பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் சிலரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை போல், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவின்போது வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் மீது பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய வழக்கிலும், வள்ளுவர் கோட்டம் முன்பு பாஜக நடத்திய போராட்டத்தின் போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரிடம் தகராறு செய்ததாக பதியப்பட்ட வழக்கு என மேலும் இரு வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை கோட்டூர்புரம் மற்றும் நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து தென்காசியில் நடந்த என் மண், என் மக்கள் பாதயாத்திரையின் போது அமர்பிரசாத் ரெட்டி போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஆழ்வார்குறிச்சி போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அமர்பிரசாத் ரெட்டியை நாளை அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதற்காக இன்று புழல் சிறையில் இருந்து அமர்பிரசாத் ரெட்டியை ஆயுதப்படை போலீஸார் அம்பாசமுத்திரம் அழைத்துச் சென்றனர். வழக்கமாக போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்லும் நிலையில் கோயம்பேட்டில் இருந்து தென்காசிக்கு அமர்பிரசாத் ரெட்டியை போலீஸார் அரசு பேருந்தில் அழைத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தினமும் நீட் தேர்வுக்குப் பயிற்சி!
ஊழல் பணம் ரூ.1 லட்சம் கோடியை மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவோம்... ராகுல் காந்தி வாக்குறுதி!
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!
விபத்துக்குள்ளான கார்... காப்பாற்றத் துடிக்காமல் மதுப்புட்டிகளை அள்ளிச் சென்ற மக்கள்!
வயிற்று வலி மருந்து என ஹேர் டை குடித்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!