பாமக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: மாட்டுக் கொட்டகையில் ஒளிந்தும் தப்ப முடியவில்லை!

கொலை குறித்து போலீஸ் விசாரணை
கொலை குறித்து போலீஸ் விசாரணைபாமக நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை: மாட்டுக் கொட்டகையில் ஒளிந்தும் தப்ப முடியவில்லை!

செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக நிர்வாகியை ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்த கொலையாளிகளைப் போலீஸ் தேடி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் அடுத்த அனுமந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வரதன் மகன் மனோகரன் (32). பாமக நிர்வாகியான இவர் தனது சகோதர்களோடு சேர்ந்து சொந்தமாக ஜேசிபி இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பரை பார்ப்பதற்காக கொண்டமங்களம் கிராமத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் மனோகரன் சென்றுள்ளார். நண்பரைப் பார்த்துவிட்டு அனுமந்தபுரம் திரும்பும் போது கொண்டமங்களம் ஊராட்சி அலுவலகம் அருகே இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட மர்மக்கும்பல் மனோகரனை தாக்க முயன்றுள்ளது. அப்போது செய்வதறியாது திகைத்த மனோகரன் தப்பித்து ஓடி அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் ஓடி ஒளிந்துள்ளார்.

அதைக் கண்ட கும்பல், அரிவாளால் மனோகரனை சரமாரியாக வெட்டியதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீஸார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் தகாத உறவா அல்லது வேறு ஏதும் முன் விரோதமா என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீஸார் குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in