மக்களின் ஆசியோடு நாடாளுமன்றத்தை அடைவீர்கள்... அண்ணாமலைக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரதமருடன் அன்ணாமலை
பிரதமருடன் அன்ணாமலை

மக்களின் ஆசியோடு கோவை தொகுதியில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்ணாமலைக்கு ஆசி கூறும் பிரதமர்
அண்ணாமலைக்கு ஆசி கூறும் பிரதமர்

நாட்டின்  18 வது மக்களவைத் தேர்தலின் முதற் கட்ட வாக்குப்பதிவு 102 மக்களவைத் தொகுதிகளில் நாளை (ஏப்.19) நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் முதற் கட்டத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போட்டியிடும் பாஜக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அவரின் அந்த கடிதத்தில், இது சாதாரண தேர்தல் அல்ல, மக்களின் ஆசீர்வாதத்துடன், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைப்பார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக  பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் கோவை தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "எனது சக காரியகர்த்தாவுக்கு. ராம நவமியின் நன்னாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு மதிப்புமிக்க வேலையை விட்டுவிட்டு நேரடியாக மக்களுக்கு சேவை செய்ய முடிவெடுத்ததற்கு உங்களை வாழ்த்துகிறேன். 

பிரதமருடன் அண்ணாமலை
பிரதமருடன் அண்ணாமலை

தமிழகம் முழுவதும் பாஜகவின் அடிமட்ட இருப்பை வலுப்படுத்தவும், சட்ட அமலாக்கம்,  நிர்வாகம் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளை முன்னிறுத்துவதில் நீங்கள் உண்மையிலேயே முக்கிய பங்காற்றியுள்ளீர்கள். உங்கள் அர்ப்பணிப்புள்ள தலைமையால் கோவைக்கு மகத்தான பலன் கிடைக்கும்.

மக்களின் ஆசியுடன், நீங்கள் நாடாளுமன்றத்தை அடைவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற அணியினர் எனக்கு பெரும் சொத்து. ஒரு அணியாக, தொகுதி மக்களின் நலனுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபடுவோம்" என்று பிரதமர் மோடி எழுதியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in