பேனா சின்னத்திற்கு அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறது: கொந்தளிக்கும் சீமான்!

சீமான்
சீமான்பேனா சின்னத்திற்கு அனுமதி அளித்திருப்பது மக்கள் விரோதப் போக்கைக் காட்டுகிறது - கொந்தளிக்கும் சீமான்!

பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு மத்திய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்குப் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்குத் தமிழக அரசு சார்பில் மத்திய அரசின் சுற்றுச்சுழல் துறையிடம் அனுமதிக் கேட்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு கட்டமைப்பு உருவாக்க வேண்டுமெனக் கூறி அனுமதி அளித்துள்ளது.

இதற்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பூவுலகு நண்பர்கள் உள்ளிட்ட அமைப்புகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேனா நினைவுச்சின்னம் அமைத்தால் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர், ‘’கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத - சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சிச் சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன்’’ எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in