தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 48 மணி நேரத்துக்குள் ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக நாளேடுகள், தொலைக்காட்சிகளில் தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2018-ம் ஆண்டு பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்த மனுவில், அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப் பின்னணி, வழக்கு விவரங்களை மக்களுக்குத் தெரியும் வகையில், நாளேடுகள், மின்னணு ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.