`ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது’- பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டம்!

`ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது’- பண்ருட்டி ராமச்சந்திரன் காட்டம்!

எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது எனவும், அவரின் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது எனவும் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக மூத்த தலைவரான பண்ருட்டி ராமச்சந்திரனைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சசிகலா சந்தித்துப் பேசினார். அப்போது தற்போதைய அதிமுக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை செய்தோம் என சசிகலா தெரிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம்- பண்ருட்டி ராமச்சந்திரன் சந்திப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற மூன்று தேர்தல்களிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிசாமியைத் தலைமையாக வைத்துச் செயல்படும் அதிமுகவைக் காப்பாற்ற முடியாது. அவரிடம் தாய்மை உள்ளம் இல்லை. அவரின் தலைமையை மக்கள் நிராகரிக்கிறார்கள்.

தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை வைத்து இயக்கத்தைச் சீரழிக்கக் கூடாது. முதலில் கட்சியைச் சரி செய்துவிட்டு, பிறகு மக்கள் ஆதரவை அவர் பெற வேண்டும். அதிமுகவில் தற்போது தலைமை சரியில்லை. ஈபிஎஸ் தலைமை தொடர்ந்தால் அதிமுக அழிவைத் தடுக்க முடியாது. அதிமுகவை மீட்க யார் முன் வந்தாலும் என் முழு ஆதரவைத் தருவேன். டி.டி.வி.தினகரன் அதிமுகவுடன் இணக்கமாகச் செயல்பட விரும்புகிறார். சசிகலா சட்டரீதியில் அதிமுகவை மீட்கப் போராடுகிறார். ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் நோக்கம் ஒன்றாக உள்ளது. அவர்கள் அதிமுகவை மீட்கப் போராடுகிறார்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in