நாட்டில் வெறுப்புணர்வை பரப்பும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்: அகிலேஷ் யாதவ் அதிரடி

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

நாட்டிலும்,சமூகத்திலும் வெறுப்பைப் பரப்பும் அமைப்புகளைத் தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், பஜ்ரங் தளம்  மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளதாவது,"பாஜக ஆட்சியில் பணவீக்கம் மற்றும் வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தில் உள்ளது. வளர்ச்சி நின்று விட்டது. நாட்டிலும் சமூகத்திலும் வெறுப்பை பரப்பும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்த காலம் இருந்தது" என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in