ஈபிஎஸ்
ஈபிஎஸ்

அதிமுக பெயரைப் பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடைவிதிக்க வேண்டும் - ஈபிஎஸ் மனு மீது இன்று விசாரணை

அதிமுக கட்சியின் பெயர், கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.

அதிமுக
அதிமுக

அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையத்திற்கும் ஈபிஎஸ் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து கடிதங்கள் அனுப்பின.

இந்நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் பயன்படுத்தி, அறிக்கைகள் வெளியிடுவது, கட்சி நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்கில் பொதுச் செயலாளர் என தன்னை தேர்தல் ஆணையமும், உயர்நீதிமன்றமும் அங்கீகரித்துள்ள நிலையில், ஒருங்கிணைப்பாளர் என ஓபிஎஸ் கூறி வருவதாகவும், இது தொண்டர்களிடையே குழப்பத்தை விளைவிப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

எனவே அதிமுகவின் கட்சியின் பெயரையோ, இரட்டை இலை சின்னத்தையோ, கட்சியின் கொடியையோ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த பிரதான உரிமையியல் வழக்கு முடியும் வரை இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் ஈபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in