
அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ்சின் மூத்த மகன் ரவீந்திரநாத் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அதற்கு முன்னதாகவே ஓபிஎஸ்சின் இளைய மகன் ஜெயபிரதீப்பை நேரடி அரசியலுக்கு வரச்சொல்லி அவரது ஆதரவாளர்கள் ராமநாதபுரம் ஏரியாவில் பற்றவைத்த பரபரப்பு இப்போது வேகமாக பரவ ஆரம்பித்திருக்கிறது.
அண்ணன் ரவீந்திரநாத் குமார் நேரடி அரசியலில் ஈடுபட்டு எம்பி-யாகி விட்டாலும் தம்பியான ஜெயபிரதீப் நேரடி அரசியலை போர்த்திக் கொள்ளாமல் இன்னமும் ஆன்மிகவாதியாகவே வலம் வருகிறார். ஆன்மிக விஷயங்களில் அதீத நாட்டம் கொண்ட ஜெயபிரதீப்பை 'ஆன்மிக செம்மல்' என்றே அழைக்கிறது அவரது விசுவாசவட்டம்.
இந்த நிலையில், கடந்த மாதம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட ஆன்மிக விழாக்களில் கலந்துகொண்டார் ஜெயபிரதீப். பெரும்பாலும் தேனியைவிட்டு தாண்டாத பிள்ளை இன்னொரு மாவட்டத்திற்கு ஆன்மிக பயணம் போனது அப்போது அனைவராலும் உற்றுக் கவனிக்கப்பட்டது. ஆன்மிக பயணம் என்றாலும் அதிமுக கட்சிப் போஸ்டர் போல ஜெயபிரதீப்புக்கு போஸ்டர் ஒட்டிய அவரது விசுவாசிகள், ஜெயபிரதீப்பின் படத்தை பெரிதாக போட்டும், போஸ்டரின் அடியில் ‘தகவல் தொழில்நுட்பப் பிரிவு’ என்றும் குறிப்பிட்டிருந்தார்கள். இந்த நிகழ்வுகளில் ஜெயபிரதீப் உடன் அதிமுக செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், ஜெயபிரதீப்புக்கு அதிமுக ஐடி விங்க் சார்பில், அவரது போட்டோவை பெரிதாக போட்டு அடிக்கப்பட்ட போஸ்டர் குறித்து, அந்த விங்கைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரே தலைமைக்கு புகார் அனுப்பினாராம். இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அதிமுக ஐடி விங் மண்டல பொறுப்பாளர் ராஜ் சத்யன் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் முனியசாமியை தொடர்புகொண்டு இதுபற்றி விசாரிக்கச் சொன்னாராம். ஓபிஎஸ் ஆதரவாளரான முனியசாமியோ, இந்த விவகாரத்தில் அதிகம் ஆர்வம் காட்டாமல், போஸ்டர் அடித்த ஐடி விங் நிர்வாகிகளிடம் ஒப்புக்கு விசாரணை நடத்தி பிரச்சினையை கமுக்கமாக முடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.