தர்மத்திற்குச் சோதனை வரலாம், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்

ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்தர்மத்திற்குச் சோதனை வரலாம், மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்: ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்

தர்மத்திற்குச் சோதனை வரலாம், ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும் என்று ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரைத் திரும்ப பெற்று, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்துள்ள நிலையில், அவரை ஈபிஎஸ் ஆதரவாளர்கள் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தின் மூத்தமகன் ஜெயபிரதீப் தனது முக நூலில் விமர்சிப்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘’தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில், எண்ணம் சொல் செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர். 

அப்படி தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவர். செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால், அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை. 

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருவர்தான் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முழுமையாக அறிந்து அவருடைய திறமையை விசுவாசத்தை உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர். 

அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது  இல்லையே என்பதை நினைக்கும் போது மனம் கலங்குகிறது. தர்மத்திற்குச் சோதனை வரலாம், ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்’’ என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in