ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு: அதிமுக பொதுக்குழு வழக்கு ஆக.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஓபிஎஸ் கோரிக்கை ஏற்பு:  அதிமுக பொதுக்குழு வழக்கு ஆக.10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஏற்று ஆக.10-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதியிடம் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதற்கு இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்குப் பட்டியலிடுவது குறித்து முடிவு செய்ய தலைமை நீதிபதிக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரை செய்தார். இதனைப் பரிசீலித்த தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் வழக்கை 2 வாரத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ண குமார் ஆஜராக உள்ளதால் வழக்கை ஒத்திவைக்குமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று விசாரணையை வரும் ஆக.10-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in