அதிமுக தலைமையை சட்ட விரோதமாக ஈபிஎஸ் கைப்பற்ற முயற்சி:தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்

அதிமுக தலைமையை சட்ட விரோதமாக ஈபிஎஸ் கைப்பற்ற முயற்சி:தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு புகார்

அதிமுக கட்சியின் தலைமையை சட்ட விரோதமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், ஒற்றைத் தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் மீண்டும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் அறிவித்தனர்.

பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பொதுக்குழு மேடையில் இருந்து வைத்திலிங்கத்துடன் கீழே இறங்க ஓ.பன்னீர்செல்வம் எழுந்தார். அப்போது, மைக்கில் பேசிய வைத்திலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்’ என்று பேசியதோடு ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் தேர்தல் ஆணையரை இன்று சந்தித்து அதிமுக பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளித்தார், அதில், அதிமுக தலைமையை சட்ட விரோதமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in