அதிமுக பெயரில் ஓபிஎஸ் வேட்பாளர்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈபிஎஸ் அதிரடி கடிதம்

அதிமுக பெயரில் ஓபிஎஸ் வேட்பாளர்: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈபிஎஸ் அதிரடி கடிதம்

ஓபிஎஸ் அணி சார்பில் காந்திநகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில், குமாரை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று வேட்பு மனு மீதான பரிசீலனை நடைபெற்றது. அப்போது, புலிகேசி நகர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் கர்நாடக மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில், ஓபிஎஸ் அணி சார்பில் அறிவிக்கப்பட்ட புலிகேசிநகர் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநில மாணவர் அணிச் செயலாளர் எம்.நெடுஞ்செழியன் மனு நிராகரிக்கப்பட்டது. நெடுஞ்செழியனின் வேட்புமனுவில் ஒரு இடத்தில் கையெழுத்து போட தவறியதால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

கோலார் தங்கவயல் சட்டமன்றத் தொகுதியில் கர்நாடக மாநில கழகத் தலைவர் அனந்தராஜ், காந்திநகர் சட்டமன்ற தொகுதியில் கர்நாடக மாநில கழகச் செயலாளர் கே.குமார் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் காந்திநகரில் போட்டியிடும் குமார் அதிமுக வேட்பாளர் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர்களை அதிமுக வேட்பாளர்களாக ஏற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "கர்நாடகாவில் புலிகேசி நகரில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. தவறான புரிதலால் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனுவை ஏற்றுள்ளனர். இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் கையெழுத்திட எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in