
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் தமிழகம் தழுவிய போராட்டத்துக்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது.
சென்னை சேத்துப்பட்டில் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ‘’ தேர்தலின் போது திமுக அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும். பழைய ஓய்வூதியத்திட்டத்தை மீண்டும் நடைமுறைபடுத்த வேண்டும் இல்லையென்றால் மார்ச் 5 தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்’’ என தெரிவித்தனர்.