ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் கிடையாது: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பு

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் கிடையாது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி அறிவிப்பு

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மானியம் பெறக்கூடிய மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மின்சார வாரியம் அறிவித்திருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு நவ.15-ம் தேதி மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி நாள் டிச. 31-ம் தேதி எனக் கூறப்பட்டது. இதன் பின் பிப். 28-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இன்று மாலைக்குள் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில்," மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. ஆதார் எண்ணை இணைக்க இனி கால அவகாசம் நீட்டிக்கப்படாது "என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். மேலும், " 2.67 கோடி பேரில் 2.66 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in