பாஜகவுக்கு குட்பை: லாலு கட்சியுடன் இணைந்து மீண்டும் முதல்வராகிறார் நிதீஷ்குமார்

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

பிஹாரில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார் நிதீஷ்

புதிதாக பதவியேற்கவுள்ள நிதீஷ் குமாரின் அரசில் ஆர்ஜேடி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். இன்று மாலை 4 மணி அளவில் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ்குமார் அளிக்க உள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வெளியில் வந்து ஆட்சியமைக்க உள்ள நிதீஷ் குமாருக்கு ஆர் ஜே டி ,காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உட்பட பல கட்சிகள் ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமார் 2020 ம் ஆண்டிலிருந்து முதல்வராக இருந்தார். இந்த நிலையில் நிதீஷ் குமாருக்கும் பாஜகவுக்கும் இடையில் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. அக்னிபத் திட்டத்தின் காரணமாக பிகார் இளைஞர்கள் பதிக்கப்படுகிறார்கள் என்று நிதீஷ்குமாரின் கட்சி குற்றம்சாட்டி, இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களாகவே பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்ட யாரையும் சந்திக்காமல் தவிர்த்து வந்தார் நிதீஷ் குமார்.

243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில் ஆர்ஜேடி கட்சிக்கு 79 இடங்களும், பாஜகவுக்கு 77 இடங்களும், உள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 இடங்களும், காங்கிரஸ் 19 இடங்களையும், சிபிஎம்-எல் 12 இடங்களையும் வைத்துள்ளது. தற்போது ஐக்கிய ஜனதா தளம் கடகட்சி பாஜகவுடனான கூட்டணியை முறித்துள்ளதால். ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் 164 உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறார் நிதீஷ் குமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in