ஒடிசாவுக்கு அளித்த வாக்குறுதிகள் நினைவில் உள்ளதா?... பிரதமர் மோடிக்கு நவீன் பட்நாயக் பதிலடி!

பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
பிரதமர் மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்

ஒடிசா மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பிரதமருக்கு நினைவில் உள்ளதா என்று ஒடிசா முதல் அமைச்சர் நவீன் பட்நாயக் கேள்வி எழுப்பி உள்ளார். 

நவீன்பட்நாயக்
நவீன்பட்நாயக்

ஒடிசா மாநிலத்தை பொறுத்தவரை நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம், பாஜக, காங்கிரஸ் கூட்டணி என மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 என நான்கு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இதே தேதிகளில் 4 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளமும், பாஜகவும் இந்த முறை தனித்தனியாக  போட்டியிடுவதால் இரு கட்சிகளுக்கு இடையே அதிகபட்ச மோதல் போக்கு நிலவுகிறது. இந்தக் கட்சிகள் உட்பட  அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் பிரச்சாரத்திற்காக பல முறை ஒடிசா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி அங்கு ஆளும் பிஜேடி அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார். 

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்நிலையில் நேற்று ஒடிசாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர்,  "ஒடிசா மாநிலத்தில் உள்ள  அனைத்து மாவட்டங்களின் பெயர்களையும், தலைநகரங்களையும்  காகித குறிப்பு ஏதுமின்றி  சொல்ல முடியுமா" என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு சவால்  விடுத்தார். நினைவுத்திறன் தொடர்பாக சவால் விடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதலமைச்சர்  நவீன் பட்நாயக் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களே, “தாங்கள் ஒடிசா மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவில் வைத்திருக்கிறீர்களா?” என நவீன் பட்நாயக் பதில் கேள்வி  எழுப்பியுள்ளார். ஒடிசா மக்களுக்கு மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதை குறிப்பிட்டு நவீன் பட்நாயக் நாயக் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in