
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜாமீன் கேட்ட செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. அதேநேரத்தில் அவரது நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வந்தது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், மருத்துவ காரணங்களை காட்டியும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பும் உள்ளதாக கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மேல்முறை செய்தார். இந்த மனு மீதான விசாரணையை வரும் 6ம்தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை வரும் 22ம்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாமல் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில உள்ள ஆவணங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 10வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
HBD AMBIKA| ‘முதல் மரியாதை’ மீது அம்பிகாவுக்கு வந்த பொறாமை!
தீபாவளி கொண்டாட்டம்... 16,895 பேருந்துகள் இயக்கம்... எந்தெந்த ஊர்களுக்கு எங்கிருந்து? முழு விபரம்!
அதிர்ச்சி... பெண் அதிகாரி கழுத்தறுத்து கொலை! மர்ம கும்பல் வெறிச்செயல்
பிரபல ரவுடி வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு! உயிர் தப்பிய குடும்பம்