`அமைச்சர் மனோ தங்கராஜின் நாட்கள் எண்ணப்படுகின்றன'- அண்ணாமலை ஆவேசம்!

அண்ணாமலை
அண்ணாமலை

``திமுகவில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த ட்வீட்டை அழித்துவிட்டு ஓடியவர் மனோ தங்கராஜ். அவரின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது'' என பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ்

ஆவின் பால் தொடர்பாக அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் அண்ணாமலை இடையே வார்த்தைப் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுரை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘’திமுகவில் கோழைகள் மட்டுமே உள்ளனர். பிரதமர் குறித்த ட்வீட்டை அழித்துவிட்டு ஓடியவர் மனோ தங்கராஜ். தமிழ்நாட்டு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரிகம் தேவை.

திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். காமராஜரை அவதூறு மூலம் தான் தோற்கடித்தனர். ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10-12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர். தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது. மனோ தங்கராஜ் அரசியலில் இருப்பது தமிழக மக்களின் சாபக்கேடு. மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன. அவர் ஐடி துறையில் இருந்தபோது அவர் செய்த ஊழலை ஆளுநரிடம் கொடுத்து உள்ளோம்.

நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்கிறோம். எனவே அது காரசாரமாக தான் இருக்கும். மரியாதை கொடுத்தால் நாங்களும் மரியாதை கொடுப்போம். இது பழைய பாஜக அல்ல. நானும் பழைய பாஜககாரன் அல்ல" என்றார் காட்டமாக.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in