அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் வெளிநடப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி: பயிற்சி விழாவில் நடந்தது என்ன?

அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் வெளிநடப்பு; அதிகாரிகள் அதிர்ச்சி: பயிற்சி விழாவில் நடந்தது என்ன?

சென்னையில் நடைபெற்ற மருத்துவப் பணியாளர்களுக்கான பயிற்சி விழா நிகழ்ச்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென புறக்கணித்துவிட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை பயிற்சி மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இதையடுத்து, திடீரென நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கிருந்து வெளியேறினார். இதனால் அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகள் செய்யவில்லை என அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோபத்துடன் வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. என்ன செய்வதென்று அரசு அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர். பெயரளவில் 50 செவிலியர்களை மட்டுமே பயிற்சிக்கு வரவழைத்ததால் அதிகாரிகளை அமைச்சர் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது. பெயரளவுக்கு நிகழ்ச்சி வைக்கக்கூடாது என்றும் இன்னொரு நாள் வைத்துக்கொள்ளலாம் என்றும் அமைச்சர் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in