தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே, இரண்டு நாட்கள் சிகிச்சைக்குப் பிறகே அன்பில் மகேஷ் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை குறித்து இதுவரை மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையையும் வெளியிடாத நிலையில், காய்ச்சல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.