`36 ஆயிரம் கோடி எங்கிருந்து வந்தது?'- பிரதமர் மாேடிக்கு மணிசங்கர் அய்யர் கேள்வி

ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டவர்கள்
ராஜீவ் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தும் மணிசங்கர் அய்யர் உள்ளிட்டவர்கள்

ஊழலை ஒழிப்போம் என்று சொல்லும் பிரதமர் மோடிக்கு கடந்த தேர்தலில் செலவு செய்ய 36,000 கோடி ரூபாய் பணம் வந்தது எப்படி? என்று மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது பிறந்தநாள் விழாவில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர் கலந்து கொண்டு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஊழலை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசிக் கொண்டிருக்கிறார். கடந்த தேர்தலில் 36,000 கோடி ரூபாய் பாரதிய ஜனதா கட்சி சார்பில் செலவு செய்யப்பட்டுத்தான் நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த 36 ஆயிரம் கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது? இது ஊழல் செய்த பணம்.

இந்தியாவில் மாற்று ஆட்சியை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தர முடியும். காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது உண்மைதான். அதை வலுப்படுத்துவதற்காக ராகுல்காந்தி தமிழ்நாட்டில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். கட்சியிலிருந்து தலைவர்கள் வெளியேறுவதைப் பற்றி பயப்படத் தேவையில்லை. என்னைப்போன்ற பெரிய தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

காங்கிரஸ் கூட்டணி பிளவுபட்டுள்ளதால் 35 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள பாஜக இரண்டு முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் முக்கியத்துவம் அளித்து ஈடுபட்டு வருகிறது. பிரதமர் வேட்பாளர் யார் என்பதை அப்போது முடிவு செய்து கொள்ளலாம்.

நமது நாடு சுதந்திரம் பெறுவதற்கு பாடுபட்டு நாட்டை ஒருங்கிணைத்தவர் ஜவகர்லால் நேரு. அதையெல்லாம் மறைத்து மோடி நாடகமாடுகிறார். 5ஜி அலைக்கற்றை ஏலம் ஊழலில் சென்று கொண்டிருக்கிறது. ஊழல் இதுவரை வெளிவரவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in