காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: அமோகமான வெற்றி!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே: அமோகமான வெற்றி!

24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தை சேராத மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸின் தலைவராக தேர்வாகியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கடந்த அக்டோபர் 17ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகளில் மல்லிகார்ஜுன கார்கே 90 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றார். மொத்தம் பதிவான வாக்குகளில் கார்கே 7,897 வாக்குகளையும், சசி தரூர் 1,072 வாக்குகளையும் பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, கர்நாடகாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கார்கே வெற்றி பெற்றதாக ராகுல் காந்தி அறிவித்தார். மேலும், " கட்சியில் எனது பங்கு என்ன என்பதை புதிய தலைவர் முடிவு செய்வார். கார்கே மற்றும் சோனியா ஜியிடம் இதுபற்றி கேளுங்கள்" என்று கூறினார். அதே நேரத்தில் சசி தரூர் தரப்பினர் இந்த தலைவர் தேர்தல் பணியில் மிகக் கடுமையான முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு அக்டோபர் 17ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள 65 வாக்குப்பதிவு மையங்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. டெல்லி மற்றும் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்த வாக்குப்பதிவு மையங்களில் மொத்தமுள்ள 9,900 வாக்குகளில் 9,500 பிரதிநிதிகள் வாக்களித்தனர். இது 96% வாக்குப்பதிவு ஆகும்.

137 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள காங்கிரஸ் கட்சிக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்களில் கார்கே சோனியா காந்தி குடும்பத்தின் நம்பிக்கையை பெற்றவராக கருதப்படுகிறார். எனவே இவர் வெற்றிபெறுவது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. அதே நேரத்தில் தலைவர் ரேஸில் இருந்த ஜி 23 குழுவைச் சேர்ந்த சசிதரூரும் கார்கேவுக்கு கடும் போட்டியைக் கொடுத்து வந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in