நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி ஆதரவு ட்விட்

சு.வெங்கடேசன் எம்.பி
சு.வெங்கடேசன் எம்.பி

மதுரை விமான நிலையத்தில் தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டதாக நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டுமென மதுரை எம்.பி வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த்

தமிழ், தெலுங்கு, இந்தியில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். முன்னணி நடிகராக வலம் வரும் இவர், அவ்வப்போது அரசியல் சார்ந்த கருத்துகளை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அது பொதுதளத்தில் பல்வேறு விவாதத்தை ஏற்படுத்தும். இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘‘மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை பாதுகாப்புப் படை வீரர்கள் துன்புறுத்தினார்கள். என்னுடைய வயதான பெற்றோரின் பைகளில் இருந்து காயின்களை எடுக்கும்படி சொன்னார்கள். நாங்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டுகோள் விடுத்தபோதும் தொடர்ந்து அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் உரையாடினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இப்படித்தான் இந்தியாவில் இருக்கிறது என்ற நிலையையும் எங்களுக்கு உணர்த்தினார்கள். வேலையில்லாத மக்கள் தங்களின் அதிகாரத்தை காட்டுகிறார்கள்’’ என்று சித்தார்த் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சித்தார்த்திற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில்," மதுரை விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரர்கள் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதானக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in