கேரள பெண்ணிற்கு ரூ.1 கோடி அபராதம்: அதிமுக மாஜி அமைச்சர் மீது அவதூறு பரப்பிய வழக்கில் பரபரப்பு!

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.

அவதூறு கருத்துக்களைப் பரப்பிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளாவிற்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருநெல்வேலி காவல் ஆணையரிடம் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் அளித்த புகாரில் அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் தன்னிடம் வாங்கிய 14 கோடி ரூபாயில் 3 கோடி ரூபாய் மட்டும் திருப்பி அளித்து விட்டு, மீதி பணத்தைத் தராமல் மிரட்டுவதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் செய்திகள் வெளியானது. ஷர்மிளாவும் இதுகுறித்து பதிவுகளைப் பதிவிட்டிருந்தார்.

இதுசம்பந்தமாக ஷர்மிளாவுக்கு எதிராக விஜயபாஸ்கர் மான நஷ்ட ஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், விசாரணைக்கு வந்த போது, விஜயபாஸ்கர் தரப்பில் நித்யேஷ் நட்ராஜ், வைபவ் வெங்கடேஷ், அனிருத் ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சராக இருந்த சி.விஜய்பாஸ்கர் சமூகத்தில் பெரிய பொறுப்பில் இருந்தவர், கொரோனா பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர், அவர் மீது இது போன்ற தவறான அவதூறுகளை கூறக்கூடாது என்றும், அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக ஒரு கோடி ரூபாயை மான நஷ்ட ஈடாக சர்மிளா செலுத்த வேண்டுமென உத்தரவிட்டார்.

மேலும் சமூக வலைதளங்களில் சி.விஜயபாஸ்கர் குறித்து சர்மிளா பதிவிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்றும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தால் அவற்றையும் நீக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in