சீதைக்கு கோயில் கட்டுவோம்... காங்கிரஸின் பரபரப்பு தேர்தல் வாக்குறுதி!

ராகுல் காந்தி கமல்நாத்
ராகுல் காந்தி கமல்நாத்

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டுவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் தேர்தல் நடக்கவிருக்கிறது.

இம்மாநிலங்களில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சிறிய கட்சிகள் என எந்த பாகுபாடுமின்றி தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இதில் 231 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் தற்போது பாஜக ஆட்சி செய்து வருகிறது. ஆனால் வரும் தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. இதில் 229 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இரண்டு கட்டங்களாக அக்கட்சி அறிவித்துள்ளது.

பிரியங்கா காங்கி கமல்நாத்
பிரியங்கா காங்கி கமல்நாத்--

மத்திய பிரதேசத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக கமல்நாத் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தசரா பண்டிகை வாழ்த்துகளோடு தனது தேர்தல் பரப்புரையையும் தொடங்கியுள்ளார். கமல்நாத் தனது பதிவில், ”காங்கிரஸ் ஆட்சியில் மத்திய பிரதேச மக்களின் நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தை உயர்த்த எந்த எல்லைக்கும் செல்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கிடப்பில் போடப்பட்டுள்ள இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் தொடங்கப்படும். மேலும் அர்ச்சகர்களின் உதவி தொகை உயர்வு, கோயில் நிலங்கள் மீட்பு ஆகியவை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in