‘பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ - சோனியாகாந்தியை சந்தித்தப்பின் லாலு பிரசாத், நிதிஷ்குமார் பேட்டி

‘பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ - சோனியாகாந்தியை சந்தித்தப்பின் லாலு பிரசாத், நிதிஷ்குமார் பேட்டி

பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினர்.

சோனியா காந்தியுடனான சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், “பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றி நாட்டைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு பிஹாரில் பாஜகவை அகற்றிய விதத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் 10-12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்” என தெரிவித்தார்

இந்த சந்திப்பு குறித்து பேசிய நிதிஷ் குமார், “நாங்கள் இருவரும் சோனியா காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும். அவர்களுக்கு கட்சித் தலைவர் தேர்தல் உள்ளது, அதன் பிறகு விரிவாக அவர் பேசுவார்” என தெரிவித்தார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in