97 லட்சம் மோசடி!- முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமாக இருந்த வங்கி பெண் மேலாளர் சிக்கினார்

உமாமகேஸ்வரி
உமாமகேஸ்வரி

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் கடன் வழங்கியதில் ரூ.97 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய கூட்டுறவு வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்தவர் உமாமகேஸ்வரி. அவர் பணியாற்றிய காலகட்டத்தில் குடியாத்தம் நகரைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாகப் போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாகக் கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் அருட்பெருஞ்ஜோதி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில், வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு காவலர்கள் போலி ஆவணம் 97 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகக் கூட்டுறவு வங்கி மேலாளர் உமா மகேஸ்வரியை நேற்று மாலை கைது செய்தனர். தற்போது அவர் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது இவர்மீது அடுக்கடுக்காய் புகார்கள் குவிந்தன. கூட்டுறவுத் துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கும் இவருக்கும் உள்ள நெருக்கம் காரணமாக அந்த புகார்கள் கிடப்பில் போடப்பட்டன. மேலும் உயர் அதிகாரிகள் இவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கி வந்தநிலையில், பல்வேறு மோசடிகளில் அவர் ஈடுபட்டுள்ளார் என அதே துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in