
குடும்ப ஆட்சியை மட்டுமே நம்புவது திமுக என்பதை மகளிர் மாநாட்டிலும் நிரூபித்து விட்டதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக உறுப்பினருமான குஷ்பு விமர்சித்துள்ளார்.
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திமுக மகளிர் அணி சார்பில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே, காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முக்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனிடையே இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சித்துள்ள தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், பாஜக உறுப்பினருமான குஷ்பு, திமுக மகளிர் மாநாடு, வாரிசு அரசியலின் உச்சம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைத்து பெண் தலைவர்களுக்கும், அரசியலில் குடும்ப பாரம்பரியம் இருப்பதாக அவர் தனது எக்ஸ்(ட்விட்டர்) தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இணைய குடும்ப அரசியலின்றி தானாக முன்னேறிய பெண்கள் யாரும் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!
கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!
ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!
பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!