வலிமை காவி அல்ல, வெண்மை தான் ! ஆளுநர் தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

வலிமை காவி அல்ல, வெண்மை தான் ! ஆளுநர் தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதிலடி

காவி குறித்து ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை பேரூர் பகுதியில் சாந்தலிங்க அடிகளார் கலை, அறிவியல் தமிழ் கல்லூரி மற்றும் தேசிய சிந்தனைக்கழகம் சார்பில் இன்று முப்பெரும் விழா நடந்தது. இதில் தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசுகையில், "என்னை பற்றி யார் என்ன சொன்னாலும், என்ன எழுதினாலும் நான் துணிச்சலோடு இருக்கிறேன். அதற்கு காரணம் நான் மக்கள் சேவை, தமிழ் சேவை, ஆன்மிக சேவை செய்து வருவதுதான். கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. காவி ஆன்மிகத்தை குறிக்கிறது. எனவே தான் தமிழகத்தில் காவி பெரியதாகவும், வலிமையாகவும் உள்ளது. நான் தேசியக் கொடியில் உள்ள காவியையும், அடிகளார்கள் அணிந்திருக்கும் காவியையும் தான் கூறுகிறேன் "என்று பேசினார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்," காவி தான் வலிமையானது என ஒரு ஆளுநர் சொல்லியுள்ளார். காவி ஒரு போதும் வலியானது இல்லை. வெண்மை தான் வலிமையானது. தமிழ்நாட்டில் காவிக்கு என்ன பலம் உள்ளது என்று தெரியவில்லை" என அவர் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in