பாஜக உண்மை கண்டறியும் குழுவில் குஷ்பு: மேற்கு வங்கத்தில் களமிறங்குகிறார்

பாஜக உண்மை கண்டறியும் குழுவில் குஷ்பு: மேற்கு வங்கத்தில் களமிறங்குகிறார்

மேற்கு வங்கத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பாஜக அமைத்துள்ள உண்மை கண்டறியும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை குஷ்புவும், எம்எல்ஏ வானதி சீனிவாசனும் இடம் பெற்றுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கடந்த 4-ம் தேதி பிறந்தநாள் விழாவிற்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவிக்கு கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து மாணவியின் தந்தை, காவல் துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அப்போது, மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதற்கு காரணமான திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவரின் மகனை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக உண்மை கண்டறியும் குழுவை பாஜக அமைத்துள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நடிகை குஷ்பூ, எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in