பேனா நினைவுச்சின்னம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாயம்
தேசிய பசுமை தீர்ப்பாயம்பேனா நினைவுச்சின்னம்: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து விரிவான அறிக்கையை தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் தாக்கல் செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டு மார்ச் 2்-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர், சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோர பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட கடலோர பகுதியாக அறிவித்து கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கும் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் மட்டுமின்றி எந்தவகையான கட்டுமானத்திற்கும் அனுமதி அளிக்க கூடாது என தடைகோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயாணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்திய கோபால் அமர்வு முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது.

மத்திய மாநில சுற்றுச்சூழல் துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, தமிழ் வளர்ச்சி துறை, கடலோர ஒழுங்கு முறை மண்டல ஆணையம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு துறைகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.  இன்று இந்த அமர்வு முன்பு மீண்டும் விசாரணை வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவுச்சின்னம் அமைப்பதற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த வகையான அனுமதியும் பெறவில்லை. திட்டத்தின் ஆவணப்பணி மட்டுமே நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு நடத்தப்பட்டு, பொதுமக்களின் கருத்து கேட்புக் கூட்டமும் நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்ட பின்னர் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பப்படும். இதன் அடிப்படையில் மட்டுமே நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்படும். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று எடுத்துரைத்தார்.

இதற்கு, "பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் முறையாக நடத்தப்பட்டதா? ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பார்த்தால் கருத்து கேட்பு கூட்டமாகவே தெரியவில்லை. பொதுமக்கள் எழுத்துப்பூர்வமாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு இருந்ததா?" என நீதித்துறை உறுப்பினர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் கேள்வி எழுப்பினர். இதே வேளையில், கருத்து கேட்பு கூட்டத்தில் மனுதாரர் கலந்து கொள்ளாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். 

இதுவரை தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பொதுப்பணி துறையின் மட்டுமே பதில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட மற்ற அரசு துறைகளும் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி வரும் மார்ச் 2-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in