கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் திடீர் ஜெர்மனி பயணம்: என்ன காரணம்?

கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் திடீர் ஜெர்மனி பயணம்: என்ன காரணம்?

சிகிச்சைக்காக கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் நேற்றிரவு ஜெர்மனி சென்றார். அவருடன் மகள் கனிமொழி சென்றுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் துணைவியாரான ராசாத்தி அம்மாள், சென்னை சிஐடி காலனியில் தமது மகள் கனிமொழியுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகளாகவே ராசாத்தி அம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருவதாக தெரிகிறது. அதுவும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ராசாத்தி அம்மாளுக்கு அவ்வபோது உடல்நிலை கோளாறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், தனது மகள் கனிமொழியுடன் ராஜாத்தி அம்மாள், மருத்துவ சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். வயது முதிர்வு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அடிக்கடி சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயர் சிகிச்சைக்காக ஜெர்மனிக்கு சென்றுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்றிரவு அவருடன் கனிமொழியும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் புறப்பட்டுச் சென்றனர். 10 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in