ஓபிஎஸ்சின் மறைமுக பாஜக சாயம் வெளுத்து விட்டது: கார்த்தி சிதம்பரம் எம்.பி கமென்ட்

ஓபிஎஸ்சின் மறைமுக பாஜக சாயம் வெளுத்து விட்டது: 
கார்த்தி சிதம்பரம் எம்.பி கமென்ட்

பாஜக தொண்டர் காவி சால்வை அணிவித்ததை ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டதன் மூலம் அவரிடமிருந்த மறைமுக பாஜக சாயம் வெளுத்து விட்டது என கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தலைமை தாங்கினார்.

அப்போது நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆண்டிப்பட்டியில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு கொடுத்த பாஜக தொண்டர், அவருக்கு காவி நிற சால்வை அணிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், மறைமுகமாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பாஜக சாயம் வெளுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சிறுபான்மையினரைத் தாக்கி மதக்கலவரத்தை தூண்டவே அக்னிபத் திட்டத்தை மோடி கொண்டுவந்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் ராணுவத்தில் சேர்பவர்கள் நான்கு ஆண்டுகளில் வெளியேற்றப்படுவார்கள். அதன் பிறகு ராணுவத்திற்கும், மாணவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இருக்காது. அந்த மாணவர்களை மதக் கலவரத்தில் ஈடுபடுத்த மோடி திட்டமிட்டுள்ளார்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in