90% ஓட்டு வாங்க வேண்டுமென அண்ணாமலை கனவு காணலாம்; ஆனால்... கனிமொழி பதிலடி!

90% ஓட்டு வாங்க வேண்டுமென அண்ணாமலை கனவு காணலாம்; ஆனால்... கனிமொழி பதிலடி!

போதைப் பொருள் தடுப்பு துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் திமுக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது. பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்” என்றார்.

மேலும், “ஆயுஷ்மான் திட்டத்தில் மத்திய அரசு ஒரே செல்போன் எண்ணில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருக்கிறது. ஆனால் மகளிர் உரிமைத் தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது.” என்றார். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, “போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு உதவ மாநில அரசு தயாராக இருக்கிறது.” என்றார்.

அண்ணாமலை
அண்ணாமலை

இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், “ 60 % வாங்கலாம், 90% கூட வாங்கலாம் என கனவு காண்பது அவரது உரிமை. ஆனால் வெற்றி நிச்சயமாக எங்களுடையது. ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார். பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள்? நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது. முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவார்கள்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in