இந்திய நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி... நெல்லையில் நம்பிக்கையளித்த கனிமொழி!

ராகுல் காந்தி கனிமொழி
ராகுல் காந்தி கனிமொழி

திமுக காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கிடையாது என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் இன்று பங்கேற்றார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி, " இந்திய நாட்டின் எதிர்காலம் ராகுல் காந்தி இங்கு வந்திருக்கிறார். நான் அடிக்கடி ராகுல் காந்தியிடம் சொல்வது, தமிழகம் உங்களை எப்போதும் வரவேற்க காத்திருக்கிறது, உங்களை அதிகம் நேசிக்கக் கூடியவர்கள் நாங்கள் என்பதுதான். அதற்கு உதாரணம் தான் காலையில் இருந்து இங்கு தகித்துக் கொண்டிருந்த வெயில் ராகுல் காந்தி கால் வைத்த உடன் பூங்காற்றாக மாறியுள்ளது.

ராகுல் காந்தி பிரச்சாரம்
ராகுல் காந்தி பிரச்சாரம்

தமிழகத்தில் இருக்கும் திராவிட மாடலின் தொடர்ச்சியாக இந்த நாட்டின் அரசமைப்பு இருக்க வேண்டும் என்ற நமது கனவை நிறைவேற்றக் கூடிய தலைவர் ராகுல் காந்திதான்

வரக்கூடிய தேர்தல் என்பது நம் முன்னோர்கள் இந்த நாட்டை எப்படி காண வேண்டும் என்று கனவு கண்டார்களோ அந்த கனவை மீட்டெடுக்கக் கூடிய தேர்தல் இது. பாஜகவுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பாஜக தொடர்ந்து எதிர்த்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார். அதானிக்கும், அம்பானிக்கும் பாஜக செய்துக் கொண்டிருந்த சேவைகளை எல்லாம் கேள்வியாக எழுப்பினார் என்ற ஒரே காரணத்துக்காக ராகுலை நாடாளுமன்றத்தை நீக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்தது தான் பாஜக.

கனிமொழி
கனிமொழி

எதிர்க்கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களை எல்லாம் சிறைக்கு அனுப்ப வேண்டும். கேள்விக் கேட்கக் கூடிய அத்தனை பேரையும் மவுனமாக்க எதை செய்யவும் தயாராக இருக்கக்கூடிய இயக்கம் தான் பாஜக. இந்த நாட்டில் பேச்சுரிமையை, சாமானிய மக்களின் உரிமையை காப்பாற்ற வேண்டும் என்றால், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்.

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாஜகவுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை கிடையாது. கேள்வி கேட்பவர்களை சிறைக்கு அனுப்பும் கட்சிதான் பாஜக. ஜனநாயக நாட்டில் பேச்சுரிமையை காக்க இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்க கூடிய இயக்கமாக இருப்பது திராவிட இயக்கம். அதன் அடிப்படை கொள்கைகளை இன்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பார்க்க முடிகிறது. தனியார் நிறுவனத்திலும் இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும் என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கனவு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. எனவேதான், இரு கட்சிகளும் இணைந்தே பயணிக்கிறது என்பதை எங்களை விமர்சிப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.

இதையும் வாசிக்கலாமே...   

ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது... ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு!

ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண் மீது பாஜகவினர் தாக்குதல்... திருப்பூரில் பரபரப்பு; அதிர்ச்சி வீடியோ!

தெலங்கானாவில் இருந்து ரயிலில் போதை மாத்திரைகள் கடத்தல்... சென்னையில் 3 பேர் கைது!

ப்ளீஸ்... இதையாவது செய்யுங்க... ரஜினிக்கு நெருக்கடி தரும் பாஜக!

குடியால் நேர்ந்த சோகம்...30 வயதில் அகால மரணம் அடைந்த பிரபல பாடகி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in