கலை பற்றியே தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது: உயர்நீதிமன்றம் வேதனை

கலை பற்றியே தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது: உயர்நீதிமன்றம் வேதனை

கலை பற்றி தெரியாதவர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வேதனை தெரிவித்துள்ளது.

2019 - 2020ம் ஆண்டில் தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்ப பெற கோரிய வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, “இயல்-இசை-நாடக மன்றம் முறையாக செயல்படுவதில்லை. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்றத்தை கலைக்க நேரிடும்.

விருதுகளுக்கான மரியாதையே இல்லாமல் போய்விட்டது. 2021ம் ஆண்டு வழங்கப்பட்ட கலைமாமணி விருது குறித்தும், தற்போது வழங்கப்பட உள்ள கலைமாமணி விருதுகள் குறித்தும் தமிழ்நாடு சுற்றுலா & கலைத்துறை செயலாளர், தமிழ்நாடு இயல்-இசை-நாடக மன்ற தலைவர் பதிலளிக்க வேண்டும்” என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in