ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது: முதல்வர் ஸ்டாலின்

பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!

தமிழக அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் ஜனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in