தமிழக முதல்வர் சொல்வதை செயல்படுத்துவது ஆளுநரின் கடமை: அன்புமணி ராமதாஸ்!

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்தமிழக முதல்வர் சொல்வதை செயல்படுத்துவது ஆளுநரின் கடமை: அன்புமணி ராமதாஸ்!

முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதை செயல்படுத்த வேண்டியது ஆளுநரின் கடமை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," ஆளுநர் ஆர்.என்.ரவியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து செயல்பட வேண்டும். ஆளுநர் நடுநிலையாகவும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் செயல்பட வேண்டும். முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதை செயல்படுத்த வேண்டியது ஆளுநரின் கடமை.

கர்நாடகாவில் நடப்பது அரசியல் கூட்டம், அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கலாம். இந்த கூட்டத்தில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக அவர் வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தமிழ்நாட்டில் நீர்பாசனத் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மைக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா 'அணையைக் கண்டிப்பாக கட்டுவோம் என கூறியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது " என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in