தைலாபுரத்தில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்: கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ராமதாஸ் ட்விட்

தைலாபுரத்தில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்: கரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ராமதாஸ் ட்விட்

பாமக நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாசுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

கரோனா தொற்று வேகமாக பரவத்தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். தவணை தவறாமல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்டிருப்பதால், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் நடத்தப்பட்டு வந்த ஆய்வுக் கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. அவற்றுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in