அமித் ஷாவின் தமிழக பிரசாரம் திடீர் ரத்துக்கு இதுதான் காரணமா?... அதிர வைக்கும் மதுரை சம்பவம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கொள்ள இருந்த தமிழக பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதற்கு மதுரையில் பறந்த ட்ரோன் தான் காரணமா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார்.

இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஏப்.4) மதுரை வருவதாகவும், தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு சாலை மார்க்கமாக சென்று ஆதரவு திரட்டும் அவர், மதுரை பழங்காநத்தம் பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்திலும் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக சுற்றுப்பயண் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அவர் கலந்துகொள்ள இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஆனால், அமித் ஷா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு மதுரையில் ட்ரோன் பறந்தது தான் காரணம் என்ற தகவல் தற்போது பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. அமித் ஷா மதுரையில் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடை, பழங்காநத்தத்தில் அமைக்கப்பட்டது. அப்போது அப்பகுதியில் நள்ளிரவில் ட்ரோன் பறந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸாருக்கு பாஜகவினர் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்து ட்ரோன் பறக்க விட்டவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், மதுரையைப் பற்றி குறும்படம் எடுக்க இருப்பதாகவும், அதற்காக காவல் நிலையத்தில் அனுமதிக்காக விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறிள்ளனர். ஆனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சி இருப்பதால் போலீஸார் அனுமதி மறுத்தனர். எனவே, நள்ளிரவில் அவர்கள் ட்ரோன் மூலம் பழங்காநத்தம் பகுதியை படமெடுக்க ட்ரோனை பறக்கவிட்டதாக தெரிவித்தனர்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அவர்கள், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த சத்தியநாராயணன், மதுரை மேலபொன்னகரத்தைச் சேர்ந்த நவீன்குமார், இஷாத் ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மூன்று பேரையும் போலீஸார் கைது செய்து ட்ரோனையும் பறிமுதல் செய்தனர்.

எனவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிகழ்ச்சி ரத்துக்கு மதுரையில் ட்ரோன் பறந்த விவகாரம் காரணமாக இருக்குமா என்ற தகவல் தற்போது பாஜகவினரிடையே பரவி வருகிறது. இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in