`ஏழைகளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?'- முதல்வர் ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

`ஏழைகளுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?'- முதல்வர் ஸ்டாலினை சாடும் ஈபிஎஸ்

``எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?" என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது. எளியோர் மற்றும் நடுத்தர வர்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு.

இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ௹.20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?. ஆவினின் நோக்கமே குறைந்த விலையில் தரமான பொருட்களை மக்களுக்கு வழங்குவது தான். ஆனால் விடியா அரசு நெய்யின் விலையினை கடந்த 9 மாதத்தில் லிட்டருக்கு ரூ.115 உயர்த்திருப்பதோடு மட்டுமல்லாமல், இன்று வெண்ணெயின் விலையை கிலோவிற்கு ரூ.20 உயர்ந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in