இந்திய கடற்படையின் செயல் மீனவர்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இந்திய கடற்படையின் செயல் மீனவர்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர்.ஸ்டாலின் இன்று கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக மீனவர்கள் பாக் ஜலசந்தி அருகே நேற்று நள்ளிரவு மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, கடற்படையினரின் எச்சரிக்கையை மீறியதால், துப்பாக்கி நடத்தியதாக கடலோர காவல்படை விளக்கம் அளித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழக மீனவர் வீரவேல் படுகாயமடைந்து மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தமிழக அரசு 2 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் .ஸ்டாலின் இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில்," 10 மீனவர்கள் (தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேர், காரைக்காலைச் சேர்ந்த 3 பேர்) தங்களது விசைப்படகில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐஎன்எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்து, அவர் பலத்த காயங்களுடன் தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சை பெறும் மீனவர் வீரவேல்
சிகிச்சை பெறும் மீனவர் வீரவேல்

இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது. இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை தாங்கள் நன்கு அறிவீர்கள். இந்தநிலையில், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. எனவே, இந்த சம்பவத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in