
பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, தாமோ மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது: பாஜக ஆட்சி அமைத்த 2014-ம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இங்கிலாந்து நாட்டினர் 200 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டனர். தற்போது அவர்களே இந்தியாவைக் கண்டு வியப்படைகின்றனர். உலகத்தின் பார்வையும் இந்தியாவின் மீது திரும்பியுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலில் மக்களின் ஆதரவோடு பாஜக மீண்டும் வெற்றிபெறும். பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைத்தால், உலகில் மிக உயர்ந்த பொருளாதாரம் கொண்ட 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும். பொருளாதார வல்லரசாக இந்தியா உருவாகும்" இவ்வாறு மோடி பேசினார்.
இதையும் வாசிக்கலாமே...
கோடிக்கணக்கில் பணம், தங்கம், வைரம் பறிமுதல்... தெறிக்கவிட்ட தேர்தல் பறக்கும் படை!
அதிர்ச்சி! தவறான சிகிச்சையால் +2 மாணவன் உயிரிழப்பு... மருத்துவர் கைது!
80 வயது முதியவரை 26 வயது இளைஞனாக்கலாம்… விஞ்ஞானிகள் சாதனை!
தேனியில் பரபரப்பு.. கவுன்சிலர்களின் பிச்சை எடுத்து போராட்டம்!
பிக் பாஸ் நிக்சனின் சில்மிஷ வீடியோ... போட்டியாளர்கள் அதிர்ச்சி!