இந்தியா வலிமையான கரங்களில் இருக்க வேண்டும்... பிரதமர் மோடிக்கு ஆதரவு கேட்கும் வக்பு வாரியத் தலைவர்!

உத்தராகண்ட் வக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ்
உத்தராகண்ட் வக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ்
Updated on
2 min read

உலகம் போரின் விளிம்பில் இருக்கும் இந்த நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை இந்தியாவுக்குத் தேவை என்று உத்தராகண்ட் வக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ் இன்று தெரிவித்தார்.

ஹரித்வாரில் உள்ள பிரன் காளியாரில் உள்ள உலகப் புகழ்பெற்ற சபீர் சாஹேப் தர்காவில் வக்பு வாரியத் தலைவர், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து பிரதமர் மோடிக்கு சாதர் வழங்கினர்.

தொடர்ந்து பேசிய அவர், "உலகம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பல்வேறு நாடுகளை குழப்பம் மற்றும் கலவரம் சூழ்ந்துள்ளது. இதுபோன்ற காலங்களில் இந்தியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வலுவான தலைமை தேவைப்படுகிறது. அவர் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் தலைமை பலவீனமான கைகளுக்கு சென்றால் நாடு பாதிக்கப்படும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிப் பணிகள் தடம் புரளாமல் இருக்க, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மீண்டும் ஒரு வலிமையான அரசு அமைய வேண்டும் என்று நாங்கள் பிரான் காளியாருக்கு சாதர் கொடுத்து கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தோம்.

பிரதமர் மோடியின் கீழ், வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைந்துள்ளது. இதற்கு முன்பு நலத்திட்டங்களின் பலன்களைப் பெறாத கடைசி மனிதருக்கும் வீடு மற்றும் கழிப்பறை கிடைக்கப்பெற்றுள்ளது. நல்ல சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன, நாடு எல்லா வகையிலும் முன்னேறி வருகிறது.

உத்தராகண்ட் வக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ்
உத்தராகண்ட் வக்பு வாரியத் தலைவர் ஷதாப் ஷம்ஸ்

எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல் பிரதமர் மோடியின் தலைமையில் முஸ்லிம்களுக்கோ அல்லது இந்திய அரசியலமைப்புக்கோ ஆபத்து இல்லை. சில அரசியல்வாதிகளின் கடைக்குத்தான் ஆபத்து. நாட்டு மக்களை குறிப்பாக முஸ்லிம்களை தவறாக வழிநடத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்தப் பொய்யைப் பரப்புகிறார்கள்" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!

பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்‌ஷன்... வைரலாகும் வீடியோ!

ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!

ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!

டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in