ஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தமா?: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பளிச் பதில்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுஈரோடு இடைத்தேர்தல் நிறுத்தமா?: தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பளிச் பதில்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் தொடர்பாக புகார் அளித்தாலும், இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் என்று எவ்வித புகாரும் தன்னிடம் வரவில்லை என தமிழ்நாடு தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ‘’ ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதுவரை 61.70 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியது தொடர்பாக அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியான தன்னிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்படுகிறது. ஆனால், ஆதாரமாக எடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும் சி – விஜில் செயலி மூலம் 1 புகார் மட்டுமே வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், அதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளமுடியாது. ஆனால், இவ்வாறு சமூக வலைதளத்தில் இருப்பதாக தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு புகார்கள் வந்தாலும், தேர்தலை நிறுத்துவது தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை ‘’ என தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in