மீண்டும் செங்கல் பிரச்சாரமா?: பொறுத்திருந்து பாருங்கள் என ட்விஸ்ட் வைத்த அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீண்டும் செங்கல் பிரச்சாரமா?: பொறுத்திருந்து பாருங்கள் என ட்விஸ்ட் வைத்த அமைச்சர் உதயநிதி

கடந்த தேர்தலில் எய்ம்ஸ் செங்கல் வைத்து பிரச்சாரம் செய்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எனது பிரச்சார யுக்தியை நீங்கள் பொறுத்திருந்து பாருங்கள்’ என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கிரீம்ஸ்  சாலையில் உள்ள லலித்கலா அரங்கில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்படக் கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் புகைப்படக் கண்காட்சி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,‘’ விளையாட்டு வீரர்களுக்கு போதுமான கட்டமைப்புக்கள் தமிழகத்தில்  இருக்கிறது, ஆனால், கட்டமைப்புகள் குறித்த  விழிப்புணர்வு வீரர்களிடம் இல்லாமல் இருக்கிறது . விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விளையாட்டுத்துறை செயலாளரிடம் பேசியுள்ளேன். அனைத்து விளையாட்டுகளுக்கும் போதுமான பயிற்சியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்காததைக் கண்டித்து கடந்த தேர்தலில் செங்கல்லை காட்டி பிரச்சாரம் செய்திருந்தேன். மீண்டும் அதுபோன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுவேனா என பொறுத்திருந்து பாருங்கள்.

எனக்கு பழைய நினைவுகளை நினைவுபடுத்தும் வகையில் புகைப்பட கண்காட்சி இருந்தது.  என்னுடைய  3,4 புகைப்படங்கள் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. புகைப்பட கலைஞர்கள் சமூகத்துக்கு ஆற்றிய பணியைத் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது" என்றார்.

மேலும், " நேரு விளையாட்டு  அரங்கில் விளையாட்டு பயிற்சி நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது , நேரு விளையாட்டு அரங்கில் உயர்கோபுர  மின்விளக்குப் பயன்பாடு இல்லாத நேரத்தில் , மாற்று மின் விளக்குகளை பயன்படுத்தும் வகையில் புதிய மின் விளக்குகளை பொருத்துவது தொடர்பாக விரைவில் முடிவு  செய்யப்படும் ‘’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in