`அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்’ - பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்`அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்’ - பாஜகவை எச்சரிக்கும் ஜெயக்குமார்!

"குழந்தையையும் கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது; அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஈரோடு கிழக்கு தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காது. நீட்டை ஒழிக்கிறோம், அதற்கான ரகசியம் எங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்றார். 22 மாதங்களுக்குப் பிறகும் ரகசியம் சொல்லாமல் மக்களை ஏமாற்றுகின்றனர்.

திமுக எம்.பி-க்கே பாதுகாப்பு இல்லாதபோது மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும். திருச்சி காவல்நிலையத்தில் புகுந்தே திமுகவினர் தாக்குதல் நடத்துகின்றனர். குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல திமுக கையில் சட்டம் ஒழுங்கு சிக்கி தவிக்கிறது. கட்சியையும் ஆட்சியையும் கட்டுப்படுத்த முடியாத ஒரு பொம்மை முதலமைச்சராக எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறார்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சீர் கெட்டுள்ளது. 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்பது வருத்தமான செய்தி. அந்த அளவிற்கு பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகள் உள்ளன.

எடப்பாடி பழனிசாமி உருவப்பொம்மையை எரித்ததால் நீக்கப்பட்டவரை மீண்டும் கட்சியில் சேர்ப்பதா? குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிடும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதிமுகவை சீண்டினால் எதிர்வினை அதிகமாக இருக்கும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in