அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!

அண்ணாமலைக்கு தைரியமிருந்தால்… அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சவால்!

"கோட்டையை முற்றுகையிடுவேன் என்று சொன்ன பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தைத் தாண்ட முடியாது" என வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் , "தமிழ்நாட்டில் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், நகைக்கடன் தள்ளுபடி , பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை திட்டம் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டுள்ளன. தமிழக அரசின் இந்த சாதனைத் திட்டங்கள் தொடரும்" என்று பேசினார்.

மேலும் "இன்னும் 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அவ்வளோ தைரியமா?. பார்த்துடலமா? இது திமுக ஆட்சி ; சொன்னதை செய்து காட்டியவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது? சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை அண்ணாமலை தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுக்க கூடாது என்று கூறியவர் இந்த அண்ணாமலை. தற்போது அவர் பாஜக தலைவர். இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப்போகிறார்?மதக்கலவரத்தை தான் உருவாக்க பார்க்கிறார். இது திமுக ஆட்சி; சவாலுக்கு பயப்பட மாட்டோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in